திங்கள், 30 ஜூன், 2014

புதன் கோளைப் பற்றிய சில தகவல்கள்

சூரியக்குடும்பத்தில் உள்ள
புதனைத்தான் பார்க்க முடியாத
கிரகம் என்று விஞ்ஞானிகள்
அழைக்கின்றனர். ஆங்கிலத்தில்
மெர்குரி என்று அழைக்கப்படும்
புதன், சூரியனுக்கு அடுத்ததாக
அமைந்துள்ளது. புதன் குறித்த
சில அடிப்படைத் தகவல்களைப்
பார்ப்போம்...
* பூமியின் விட்டத்தில் மூன்றில்
ஒரு பங்கு தான், புதனின் விட்டம்.
அதேபோல பூமியின் மொத்த
எடையில் 5.5 சதவீதம் தான்
புதனின் எடை.
* சூரியனை மிக வேகமாகச்
சுற்றி வரும் புதன், சூரியனில்
இருந்து சுமார் 5.8
கோடி கிலோமீட்டர் தொலைவில்
இருக்கிறது.
* நம்முடைய நாள் (24 மணி நேரம்)
கணக்குப்படி 88 நாட்களில்
சூரியனைச் சுற்றி வருகிறது,
புதன். அதாவது, புதனில்
ஒரு வருடம் என்பது நமக்கு 88
நாட்களாகும்.
* புதன்,
தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 55
நாட்கள் எடுத்துக் கொள்கிறது.
* மெர்குரி என்பது, ரோம்
நாட்டிலுள்ள சந்தனத்தால் ஆன
இறக்கைகளைக் கொண்ட
தேவதூதனின் பெயராகும்.
* இந்தக் கிரகம் சூரியனுக்கு மிக
அருகில் இருப்பதால், சூரிய
ஒளியின்
பிரகாசத்துக்கு நடுவே இதைக்
காண்பது கடினம். பொதுவாக
சூரிய
உதயத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பும்,
சூரிய
அஸ்தமனத்திற்கு ஒருமணி நேரத்திற்குப்
பின்பும் தான் இதைப் பார்க்க
முடியும். அதையும்
எப்போதாவது தான் பார்க்க
முடியும். எனவே, புதனைப்
பார்த்தவர்களின்
எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
* புதனுக்கு மிக மெல்லிய
வளிமண்டலம் இருக்கிறது. இந்த
வளிமண்டலம், சோடியம்,
பொட்டாசியம், ஹீலியம் மற்றும்
ஹைட்ரஜனால் ஆனது.
* பகல் நேரத்தில் 427
டிகிரி செல்சியஸ் வெப்பமும்,
இரவு நேரத்தில் 173
டிகிரி செல்சியஸ் வெப்பமும்
புதனில் காணப்படும

ஞாயிறு, 29 ஜூன், 2014

'பாம்பு பாதி-பெண்ணில் பாதி' கலந்து பிறந்த தாய்லாந்து சிறுமியை பார்க்க அலைமோதும் மக்கள் கூட்டம

தாய்லாந்து நாட்டின் தலைநகர்
பாங்காக்கில்
மார்பு பகுதிக்கு மேலே பெண்ணாகவும்,
கீழ் பகுதி பாம்பாகவும்
தோற்றமளிக்கும் விசித்திர
சிறுமியை காண நாள்தோறும்
ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில்
காத்திருக்கும் செய்தி ஆசிய
ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது 8 வயது சிறுமியாக
இருக்கும் மய் லி ஃபே என்ற அந்த
சிறுமி பிறந்த
போதே அவளது உடலின் கீழ்
பகுதி பாம்பின் தோற்றத்துடனும்,
தலை முதல் மார்பு வரையிலான
பகுதி மனித தோற்றத்துடனும்
இருந்ததாக அவளது பெற்றோர்
கூறுகின்றனர்.
இதைப் போன்ற வினோதப் பிறவிகள்
உலகில் தோன்றுவது மிக, மிக
அரிது என குறிப்பிடும் உடல்
கூறியல் வல்லுனர்கள், இந்த
முரண்பாடான உடல்
அமைப்பை மருத்துவ
குறியீட்டின்படி, 'செர்பெண்டொசிஸ்
மெலியனார்கிஸ்’ அல்லது 'ஜிங் ஜிங்
நோய்’ என்று குறிப்பிடுகின்றனர்.
இயற்கை படைப்பின் இந்த
முரண்பாட்டினை நிவர்த்திக்க
இதுவரையில் எவ்வித
சிகிச்சை முறையும்
கண்டுபிடிக்கப்படவில்லை எனவும்
தாய்லாந்து நாட்டின் மருத்துவ
வல்லுனரான டாக்டர் பிங் லாவ்
என்பவர் கூறியுள்ளார்.
பாம்புப் பெண்ணான மய் லி ஃபே-
வை தரிசிக்கவும்,
அவளது உடலை தொட்டு கண்களில்
ஒற்றிக்கொள்ளவும் இந்து, புத்த
மதத்தினர், உள்ளூர் மற்றும்
வெளிநாடுகளை சேர்ந்த
ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும்
அதிகாலை முதல்
நள்ளிரவு வரை நீண்ட வரிசையில்
கால்கடுக்க காத்துக் கிடக்கின்றனர்.
அவர்கள் வழங்கும்
காணிக்கை பணத்தின் மூலம் அந்த
பெண்ணின் குடும்ப வருமானமும்,
வாழ்க்கை தரமும் குறுகிய
காலத்துக்குள்ளாகவே அபரிமிதமான
வளர்ச்சியை அடைந்துள்ளது.
இருப்பினும், அவர்களின்
நிம்மதியும், தனிமையும்
தொலைந்துப் போனதாக மய்
லி ஃபே-வின் நெருங்கிய உறவினர்
ஒருவர்
தாய்லாந்து தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

உலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ!

"திங்கறதுக்கே சோறு இல்லையாம்…
இதுல இவனுக ராக்கெட்
விடுறானுகலாம்… ராக்கெட்டு…"
இதுதான் ஒவ்வொரு முறையும்
ராக்கெட் விண்ணில்
ஏவப்படும்போது டீக்கடை விமர்சகர்களின்
கருத்தாக இருக்கும். அவர்களின்
வாயை அடக்கும் விதமாகவும்,
ராக்கெட் ஏவுவதினால் இந்திய
விண்வெளி ஆய்வுக் கழகமான
இஸ்ரோவிற்கு கணிசமான
வருமானம்
கிடைக்கிறது என்பதை உணர்த்தும்
விதமாகவும், 5
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ நாளை (திங்கள்கிழமை)
விண்ணில் ஏவவுள்ளது. அதற்கான
பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள
நிலையில், அந்தத் திட்டத்தின்
முக்கியத்துவம் மற்றும், அதன்
செயல்பாடுகள்
குறித்து பார்க்கலாம்.
நோக்கம்:
சுயமாக
ஒரு செயற்கைக்கோளை கட்டமைத்து,
அதனை நிர்ணயிக்கப்பட்ட
சுற்றுப்பாதையில்
நிலை நிறுத்தும் திறன் படைத்த
நாடுகளின் தர வரிசைப்பட்டியலில்
இந்தியா 5 வது இடத்தில் உள்ளது.
இதனை மீண்டும் உறுதிப்படுத்தும்
முயற்சியாக, பல்வேறு நாடுகளைச்
சேர்ந்த
செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக
விண்ணில் ஏவியுள்ள இஸ்ரோ,
பிரான்ஸ், ஜெர்மனி, கனடா,
சிங்கப்பூர், ஆகிய 4 நாடுகளைச்
சேர்ந்த 5
செயற்கைக்கோள்களை விண்ணில்
ஏவவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம்
இஸ்ரோவிற்கு கணிசமான
வருமானம் கிடைக்கவுள்ளது.
தொடர் வெற்றியில் PSLV:
இந்தியாவைப் பொறுத்தளவில்
செயற்கைக்கோள்களை விண்ணில்
செலுத்துவதற்கு இரண்டு வகையான
ஏவூர்திகளை பயன்படுத்தி வருகிறோம்.
அவை GSLV, PSLV இவற்றில் PSLV யைப்
பொறுத்தளவில் இது 27
வது முயற்சி… இதில் ஏற்கெனவே 26
வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா,
சமீபகாலமாக PSLV யின் நவீன ரகமான
PSLV "XL"
வகை ஏவூர்திகளை பயன்படுத்தி வருகிறது.
குறிப்பாக PSLV C-11 ஐ
பயன்படுத்தி சந்திரனுக்கு சந்திராயனையும்,
PSLV C-25 ஐ பயன்படுத்தி செவ்வாய்
கிரகத்திற்கு மங்கள்யானையும்,
செலுத்திய இஸ்ரோ, மற்ற தகவல்
தொடர்பு பயன்பாட்டிற்கான
செயற்கைக்கோள்களையும்
அனுப்பியுள்ளது.
இந்த தொடர் வெற்றிகளின் அடுத்த
கட்டமாக தற்போது விண்ணில்
பாயவுள்ள PSLV C-23 ஏவூர்தி 230 டன்
எடையும் 44.4 மீட்டர் உயரமும்
கொண்டது. 4 அடுக்குகளைக்
கொண்ட இந்த ஏவூர்தியில் திட
மற்றும் திரவ எரிபொருட்கள்
பயன்படுத்தப்படுகின்றன. மேலும்
இந்த ஏவூர்தியில்
வைத்து அனுப்பப்படும்
செயற்கைக்கோளின்
எடை குறைவு என்பதால்,
ஏவூர்தியின் வெளிப்புறத்தில்
பொருத்தப்பட்டிருக்கும் திட
எரிபொருளில் இயங்கும்
உந்துவிகள் இணைக்கப்படவில்லை.
இவ்வாறு செலுத்தப்படும் 10
வது ஏவூர்தி இதுவாகும்.
செயற்கைக்கோள்களும் அதன்
பயன்பாடுகளும்:
1. SPOT-7 - பிரான்ஸ்: பூமியைப்
பற்றிய ஆய்விற்காக.
2. AISAT - ஜெர்மனி: கப்பல்
போக்குவரத்து, வழித்தடம் குறித்த
பயன்பாட்டிற்காக
செலுத்தப்படுகிறது.
நானோ செயற்கைக்கோள்களில்
முதல் DLR செயற்கைக்கோள்.
3. NLS7.1 (Can-X4) - கனடா:
துல்லியமான அளவீடுகளுக்காக
பயன்படவுள்ளது.
4. NLS7.2 (Can-X5) - கனடா:
துல்லியமான அளவீடுகளுக்காக
பயன்படவுள்ளது.
5.VELOX-1 - சிங்கப்பூர்: கட்டிட
வரை படம் தயாரிக்க பயன்படும்.
எவ்வாறு ஏவப்படுகிறது ?
5
வெளிநாட்டு செயற்கைக்கோளை விண்ணில்
நிலைநிறுத்தப் பயன்படும்
ஏவூர்தியான PSLV C-23
ஏற்கனவே ஷ்ரிஹரிகோட்டாவில்
உள்ள முதலாவது ஏவுதளத்தில்
கட்டமைக்கப்பட்டு, செயற்கைக்
கோளும்
பொருத்தப்பட்டு தயாராக
இருக்கிறது. இந்த ஏவுதளத்தைப்
பொறுத்தளவில் முழுக்க முழுக்க
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய 5 மாடி கட்டிடம் உயரம்
கொண்ட இந்த ஏவுதளம், நகரும்
வகையிலும், பேரிடர் காலங்களில்
பாதிக்கப்படா வண்ணமும்
அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான
கவுண்டவுன் நேரத்தில்
ராக்கெட்டிற்கு தேவையான
எரிபொருட்களை நிரப்புதல்,
ராக்கெட் செல்லும்
பாதையை கண்காணித்தல் உள்ளிட்ட
பணிகளும்,
ராக்கெட்டை ஏவுவதற்கான
ஆயத்தப்பணிகள் என அனைத்துப்
பணிகளும் ஷ்ரிஹரிகோட்டாவில்
உள்ள
முதன்மை கட்டுப்பாட்டு அறையில்தான்
நடைபெறும்.
கவுண்டவுன் நிறைவடைந்ததும்,
விண்ணில் சீறிப்பாயும் ராக்கெட்டின்
முதல் தளம் 110.6
வது நொடியிலும்,
இரண்டாவது தளம், 262.2
வது வது நொடியிலும்,
மூன்றாவது தளம், 521.2
வது நொடியிலும்,
பிரிந்துவிடும், இறுதியாக 4
வது தளத்தில் இருந்து ராக்கெட்
ஏவப்பட்ட 1073.4 வது நொடியில்
பிரான்ஸின் SPOT-7 செயற்கைக்
கோள் தனியாக
பிரிந்து பூமியை சுற்ற
ஆரம்பித்துவிடும், அதேபோல்,
ஜெர்மனியின் AISAT
செயற்கைக்கோள் 1113.7
நொடியிலும், கனடாவின் NLS7.1
செயற்கைக்கோள் 1143.7
நொடியிலும், NLS7.1 1173.7
நொடியிலும் , சிங்கப்பூரின்
VELOX-1 செயற்கைக்கோள் 1198.7
வது நொடியிலும்
பிரிந்து அதனதன்
சுற்றுப்பாதையில்
நிலை நிறுத்தப்படும். இதற்கான
கட்டளைகள் அனைத்தும்,
ஷ்ரிஹரிகோட்டாவில் உள்ள
முதன்மை கட்டுப்பாட்டு அறையில்
இருந்தே பிறப்பிக்கப்படும்,
இதனையடுத்து அந்தந்த நாடுகளில்
உள்ள செயற்கைக் கோள்
கட்டுப்பாட்டு மையத்தின்
கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்.
இதனால் என்ன பயன் ?
1.
ஒரு வெளிநாட்டு செயற்கைக்கோளை ஏவுவதின்
மூலம் ரூ.5 கோடி முதல் ரூ.100
கோடி வரை இஸ்ரோவிற்கு வருமானம்
கிடைக்கும், இந்த வருமானத்தின்
மூலம், இஸ்ரோ தனது மற்ற
திட்டங்களுக்கு மத்திய
அரசை நம்பியிருக்கத்
தேவையில்லை.
2. மற்ற நாடுகளின்
செயற்கைக்கோளை நாம் விண்ணில்
நிலை நிறுத்தித்தருவதின் மூலம்,
உலக
நாடுகளோடு நல்லுறவு மேம்பட
அடித்தளமாக இருக்கும்.
3. ஏற்கெனவே 35
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில்
நிலை நிறுத்தியுள்ள இஸ்ரோ,
மேலும் 5
செயற்கைக்கோள்களை PSLV C-23
மூலம் கொண்டு செல்வதின் மூலம்
அதன் எண்ணிக்கை 40 ஆக உயர்கிறது.
இதனால் பல்வேறு நாடுகள்
இஸ்ரோவுடன் வர்த்தக ரீதியான
உறவு வைத்துக்கொள்ள
விரும்பும்.
இதுபோன்ற திட்டங்கள்
நமக்கு உத்வேகத்தை அளிப்பதோடு,
அறிவியல் மீதான
ஆர்வத்தை இன்றைய
மாணவர்களுக்கு ஏற்படுத்த
அடித்தளமாக இருக்கும்

சனி, 28 ஜூன், 2014

டைசன் இயங்குதளம்(TIZEN OS)

டைசன் இயங்குதளம் (TIZEN OS) இது ஆன்ட்ராய்டு போன்ற தனி இயங்குதளம் ஆகும்
இதுவும் ஒரு open source ஆகும்
இதை சாம்சங் நிறுவனம் வடிவமைத்துக் கொண்டுள்ளது