வெள்ளி, 23 அக்டோபர், 2015

அரிசியின் டெக்னாலஜி பயன்

ஆயுத பூஜை அன்று அனைவரும் கார்,
பைக்கை எல்லாம் குளிப்பாட்டுவார்கள் என
தெரிந்ததோ என்னவோ, என் செல்லக்குட்டி
ராகவன், காலையிலேயே ஒரு பக்கெட்
தண்ணீரில் என் ஸ்மார்ட் போனை
குளிப்பாட்டிட்டான்.
விளைவு, போனுக்கு ஜலதோஷம், எனக்கு
வீட்டிலேயே பூஜை... போன் ஆன் ஆகுது,
Incoming call வருது; ஆனா touch screen work
ஆகலை; Touch screen work ஆகாம போன்ல
எதையுமே பண்ண முடியல; Phone ஐ unlock
கூட பண்ண முடியலை;
திருதிரு-னு முழிச்சுட்டு இருக்கும்
போதுதான் ஆபத்பாந்தவன் Google - ஞாபகம்
வந்தது.
இப்படி போன் தண்ணீரில் நனைந்து
விட்டால், phone back cover, sim card, memory card,
battery எல்லாத்தையும் கழற்றி விட்டு, ஒரு
air lock cover-ல அரிசிய போட்டு, அதுக்கு
phone-ஐ போட்டால், phone-க்குள் இருக்கும்
தண்ணீரை அரிசி உறிஞ்சி விடுமாம்.
அரிசியால LCD Screen க்கு பின்னால்
இருக்கும் தண்ணீரை கூட உரிஞ்ச
முடியும் என்று Google கூறியது.
air lock cover-க்கு எங்கே போவது என
நினைக்கையில், "பேசாம phoneஐ அரிசி
பாத்திரத்துக்குள்ளேயே போட்டுட்டா
என்ன?" என அம்மா கேட்க, phoneஐ அரிசி
பாத்திரத்துக்குள் போட்டு புதைச்சுட்டு,
'திக்திக்' மனதோட அரை மணி நேரம்
கழித்து எடுத்து பார்த்தேன்.
WOW... Touch Screen இப்போ நல்லா ஒர்க்
ஆகுது. உடனே outgoing calls போகுதா, key
pad work ஆகுதா, music play ஆகுதா-னு
எல்லாம் செக் பண்ணிணேன். Rear Camera
lensல தண்ணீர் திரை போல தெரிந்தது.
மறுபடியும் அரை மணி நேரம், அரிசியின்
உதவி தேவைப்பட, இப்போ என் phone- perfectly
alright.
எதிர்பாராம உங்களில் யாராவது
மழையில் போனுடன் நனைந்து விட்டால்,
இந்த தகவல் உபயோகமாக இருக்கும் என
நினைத்து Share செய்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக